செவ்வாய், 16 அக்டோபர், 2012

தமிழ்ல என்ர முதல் போஸ்ட்

புளொக் எழுது புளொக் எழுது தம்பி எண்டு என்னில அக்கறை வைச்ச வாத்திமார் என்னை போட்டு அரியண்டப்படுத்தி கொண்டு இருந்த காலத்தில நான் இத என்ன மண்ணாங்க்கட்டிக்கு எண்டு விட்டுட்டு பொம்புளப்பிள்ளைகள சயிட் அடிச்சுக்கொண்டு திரிஞ்சன். இப்ப என்னடா எண்டா என்ர குடும்பத்த பற்றி யோசிச்சுக்கொண்டு இருக்கக்குள்ள ஒரு மொக் இன்ரேவியூ எண்டு சொல்லி கொழும்புக்கு ஒரு சொவ்வெயார் கொம்பனிக்கு வரசொல்லி என்ர கூட்டாலிகளோட போனன். அங்க என்னடா எண்டா எக்கச்சக்கமான விசயங்கள சொன்னாங்க. அதோட இந்த புளொக், லிங்ட் இன் எண்டு கொஞ்சம் இருக்கு பாருங்கோ. அதுகள கொஞ்சம் எம்ரி யா வையாதேங்கோ எண்டாங்கள். அப்ப பாருங்கோ எனக்கு அவ்வளவு இங்கிலிசும் தெரியாது. அப்ப நான் என்ன மண்ணாவது தமிழ்ல எழுதி தொல்லைப்பம் எண்டு இந்த புளொக் கை தொடங்கினான்.

அது மட்டுமில்லை பாருங்கோ. இந்த யாழ் ஐரி ஹப் எண்டு ஒரு நிறுவனத்தில கொஞ்ச பேர் இருக்கிறாங்கள். அவங்களும் இப்புடி ஆளுக்கு மாறி ஆள் இப்படி எழுதுறத்தில பேய்க்காய்கள். அவங்களையும் ஃபலோ பண்ணிப்பாப்பம் எண்டு வெளிக்கிட்டதின்ர வெளிப்பாடு தான் இது.

கொஞ்சம் பொறுத்திருங்க. நிறைய சுவாரசியங்கள், நான் பட்ட வேதனைகள், அவமானங்கள், குட்டிக் குட்டிக் கதைகள் , என்ர நண்பர்களை பற்றி  எல்லாம் எழுதிறன்.

சீ யூ 

1 கருத்து:

  1. இப்பவாவது எழுத வேணும் என்று உங்களுக்கு தோண்றி இருக்கு. அதை நான் வரவேற்கின்றேன்.
    சுவாரசியமான போஸ்டை எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு